செய்திக் குறிப்பு:22

பொலிஸ் நிலையத்தின் ஒரு பகுதி மீண்டும் மக்கள் பாவனைக்கு

vuc

செய்திக் குறிப்பு:22

பொலிஸ் நிலையத்தின் ஒரு பகுதி மீண்டும் மக்கள் பாவனைக்கு

வல்வெட்டித்துறை நகர சபைத் தீர்மானத்தின்அடிப்படையில் வல்வெட்டித்துறையின் மையப்பகுதயில் நீண்டகாலமாக அமைக்கப்பட்டிரந்த இராணுவமுகாம்கள் மற்றும் காவல் நிலையத்திற்காகப் பணன்படுத்தப்பட்டுக் கொண்டிருந்த வீடுகள், கடைத் தொகுதிகளை மீண்டும் பொது மக்களிடம் கையளித்து வல்வை நகரை இயல்புநிலைக்குக் கொண்டு வரவேண்டும் என்று ஜனாதிபதி, வடமாகாண ஆளுநர் மேஜர்.சந்திரசிறி, அரச அதிபர் திருமதி.இமெல்டா சுகுமார் ஆகியோருக்குக் கடிதங்களைஅனுப்பியும், ஆளுநர் மற்றும் அரச அதிபருடன் நேரில் தொடர்பு கொண்டும் விடுத்தவேண்டுகோளின் அடிப்படையில் கடந்த டிசெம்பர் 22 ஆம் திகதி பிரதிப் பொலிஸ் மா அதிபர்நகரபிதாவுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் பொழுது உடனடியாக யாழ்ப்பண வீதியின்கிழக்குப்புறமாக உள்ள கடைத்தொகுதிகளையும், வீடுகளையும் விட்டுத் தருவதாக வாக்குறுதி அளித்திருந்தார். அதேவேளை தற்போது காவல் நிலையமாகப் பயன்படுத்தப்பட்டு வரும் வீடுகளுக்கான வாடகையைச் செலுத்திவருவதாகவும், வீட்டீன் உரிமையாளர்கள் வாடகையை உயர்த்தித் தருமாறு கேட்டுக் கடிதங்களை அனுப்பியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டு வீட்டு உரிமையாளர்கள் தமக்குத் தேவையெனக் கோரும்பட்சத்தில் விரைவில் அந்தப் பகுதி வீடுகளையும் கையளிப்பதாக பிரதிப் பொலிஸ் மாஅதிபர்நகரபிதாவிடம்  தெரிவித்திருந்தார்.

 

N.Anantharaj
Chairman
வல்வெட்டித்துறை

 

Contact Administrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com