
கடந்த15 வருடங்களுக்கும் மேலாக வல்வெட்டித்துறை நகரத்தின் இத்தயப் பகுதியாகசந்தி ,கடைத் தொகுதி மற்றும் குடியிருப்புக்கள்யாவும் இராணுவ முகாம்களாகவும்,காவல் நிலையமாகவும் மாற்றப்பட்டுள்ளதால் சுமார் அறுபதுவீடுகளும்,பத்திற்கு மேற்பட்ட வர்த்தக நிலையங்களும் பாதுகாப்புப்படையினரதும்,காவல் துறையினரதும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.இதனால் வல்வெட்டித்துறை நகரம் பாலைவனம் போல சோபை இழந்துகாணப்படுகிறது.இந்த நிலையில் இந்நகரத்தைக் கட்டியெழுப்புவது என்பது மிகவும்கடினமானதொரு பணியாகத் தான் இருக்கும்.இதனால் பிற்பகல் 6 மணிக்குப் பிறகுவல்வெட்டித்துறை நகரப்பகுதி ஆள்நடமாட்டம் குறைந்து களை இழந்து போய் விடுகிறது. உண்மையில்அரசாங்கத்தினால் உத்தியோகபூர்வமாகப் பிரகடனப்படுத்தப்படாத ஒரு உயர் பாதுகாப்புவலயமாகவே விளங்குகிறது என்பது வெளியுலகத்திற்குத் தெரியாது.எனவே தான் வல்வைநகரத்தை மீளக் கட்டியெழுப்புதல் என்ற வேலைத்திட்டத்தின் கீழ் சந்தியைச் சூழவுள்ளஇராணுவ முகாமை அகற்றி அவர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள காணிக்குக் கொண்டு செல்லவேண்டும் என்று எமது சபை தீர்மானத்தைக் கொண்டு வந்தது.இது தொடர்பாக வடமாகாண கௌரவஆளுநர் மேஜர் சந்திரசிறி,அரச அதிபர், இராணுவத்தளபதி,ஆகியோருக்குக் கடிதங்கள்அனுபப்பட்டதுடன் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் என்னால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இது தொடர்பாக விரைவில் இராணுவ முகாமை அகற்றுவதாக கௌரவ ஆளுநரும்,அமைச்சர் கௌரவ டக்ளஸ்தேவானந்தாவும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் வைத்தே வாக்குறுதிஅளித்திருந்தனர்.அவர்களுடைய வாக்குறுதியின் மீது நம்பிக்கை வைத்துக்காத்திருக்கிறோம்.ஆனால் எவ்வளவு காலம் எடுக்கும் என்பதை அவர்கள் தான் தீர்மானிக்கவேண்டும்.எமது மக்களின் நிம்மதியானதும்,சுபீட்சமானதுமான வாழ்வில்அக்கறை இருக்குமாயின் இராணுவ முகாமை அகற்றுவதற்கு நாள் குறிக்கத் தேவையில்லை.
இந்த வினாவுக்கான பதிலைஉங்களுக்குத் தெரியப்படுத்தும் பொழுது, அரச அதிபர், அதிமேதகு ஜனாதிபதி, கௌரவ ஆளுநர் ஆகியோருக்கு நான் எழுதிய கடிதம் சார்பாக, ஜனாதிபதியின்அறிவுறுத்தலுக்கு அமைவாகக் கடந்த வெள்ளிக்கிழமை(30ம் திகதி) பிரதிப் போலீஸ் மா அதிபர் என்னுடன் தொடர்பு கொண்டு காவல் நிலையம் அமைந்துள்ளவீடுகள்,கடைகள் போன்றவற்றில் இருந்து தாம் வெளியேறுவது தொடர்பாகஉரையாடியதில் எனக்கு அதிர்ச்சியான தகவல்கள் கிடைத்தன.அவர்களால் பொறுப்பேற்கப்பட்டவீடுகளுக்கு கடந்த 15 வருடங்களுக்கு மேலாக வாடகை செலுத்தி வருவதாகக்குறிப்பிட்டதுடன்,வீட்டு உரிமையாளர்கள் தம்மை வெளியேறுமாறு கேட்பதற்குப்பதிலாக வாடகையை உயர்த்தித் தருமாறு கேட்பதாகவும் கூறினார்.அவருடனானபேச்சுவார்த்தையின் பின்னர் யாழ் வீதியின் கிழக்குப் புறமாக உள்ளகடைத்தொகுதிகளையும் வீடுகளையும் விட்டு வெளியேறுவதாக வாக்குறுதி அளித்தார்..அதேபோன்று இராணுவ முகாம் சூழல் வல்வெட்டித்துறை நகர அபிவிருத்திக்கு ஒரு தடையாகஇருப்பதைத் தாம் உணர்வதாகவும்,பாதுகாப்பு அமைச்சுடன் தொடர்பு கொள்ளுமாறு எனக்குக்கூறினார், தானும் இதனைத் தெரியப்படுத்துவதாகவும் கூறியது எனக்கொருநம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
வல்வை நகராட்சி மன்றப்பிரதேசங்களில் முன்னாள் போராளிகள் பலர் தமது இயல்பான வாழ்க்கையை மேற்கொண்டுவருகின்றனர்.ஆனால் எத்தனை பேர் உள்ளார்கள் என்ற விபரத்தை உங்களுக்கு வழங்கமுடியாது இருக்கின்றது.ஆனால் அவர்களுடைய சந்தோஷமான வாழ்வுக்கும் ஏதாவது செய்தேயாகவேண்டும்.எமது மக்களின் வாழ்வுக்காகத் தம்மை அர்ப்பணித்த அந்தப் போராளிகளை நாம் புறக்கணித்து விடமுடியாது.அவர்கள் தற்போது மனவுளைச்சலுக்கும்,மகிழ்ச்சியற்றதுமான ஒருநிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்பது உண்மை தான்.அவர்களுக்கு நல்லதொரு வாழ்வை ஏற்படுத்தி,நிறைவானவர்களாக இந்தமண்ணில் வாழ வைக்க வேண்டும்.அதே வேளை மற்றவர்களைப் போல கௌரவமானவர்களாகவும் வாழவைக்க வேண்டியது நாம் ஒவ்வொருவரினதும் கடமையாகும்.அதற்கான திட்டங்களை அடுத்தஆந்திலாவத் நடைமுறைப்படுத்த முயற்சிப்போம்.இதன் முக்கியத்துவத்தைநினைவூட்டியதற்காக எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரு நகரத்திற்கு அல்லது கிராமத்திற்குஅழகூட்டுவதும்,பண்பாட்டை எடுத்துக்காட்டும் சின்னங்களாகவும் விளங்குவது அந்தஊரின் ஆலயங்களாகும் .இதனையே ஒளவையார் கூட “கோவிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்.”என்றுகூறியுள்ளதை நாம் கவனத்திற் கொள்ள வேண்டும்.இலங்கை,இந்திய இராணுவங்களால்மக்கள் பல்வேறு துன்பங்களுக்கும்,அழுத்தங்களுக்கும் ஆளான போது எமது மக்களைப்பேரழிவிலிருந்து காப்பாற்ற எமது ஊரின் ஆலயங்களே துணை புரிந்தன என்பதை இன்றும் எமதுமக்கள் நம்புகின்றனர்.ஆனால் நீங்கள் குறிப்பிட்டது போன்று ஆலயங்களுக்காகச் செலவு செய்யப்படும் தொகையில்ஒரு பகுதியை நகர மக்களின் வாழ்வுக்காகவும் செலவழிக்க முன் வரும் போது எமதுமக்களின் வாழ்க்கையிலும் ஒரு மறுமலர்ச்சி ஏற்படும்.பெரிய ஆலயங்கள் ஒவ்வொன்றும் ஆலயவளர்ச்சியுடன் மக்களின் ஆன்மீக வளர்ச்சி,சில தேவையான உட்கட்டமைப்புவசதிகளை ஏற்படுத்தல்,அறநெறி வகுப்புக்கள்,கலை கலாச்சார விழுமியங்கள்போன்ற செயற்பாடுகளில் கவனம் செலுத்துவதற்கும் ஆலயங்களின் அறங்காவல் குழுக்கள்முன்வர வேண்டும்.ஆலய அறங்காவல் குழுக்களால் முன்னெடுக்கப்படும் இவை போன்றஅபிவிருத்தித் திட்டங்களில் வல்வெட்டித்துறை நகராட்சி மன்றம் எப்போதும் உறுதுணையாகஇருக்கும்.
பருத்தித்துறை-காங்கேசன்துறைவீதி அகலிப்பு வேலைகள் 2012 தை மாதத்திலிருந்து ஆரம்பிக்கவுள்ளதாக வீதிஅபிவிருத்தி அதிகார சபையினர் தெரிவித்துள்ளனர்.வீதி அகலிப்பு வேலைகள்முடிவடைந்தால் எமது நகரம் அழகூட்டப்படும்.வீதியின் இரு மருங்கிலும் நிழல் தரும்மரங்களை நாட்டி அழகூட்டுவதற்காக எமது நகராட்சி மன்றம் திட்டமிட்டுள்ளது. வீதிஅபிவிருத்தி அதிகார சபையினர் வீதியின் மையப் பகுதியிலிருந்து இருபுறமும் 50 அடிவிட்டே கட்டிட அனுமதியை வழங்க வேண்டும் என்று எங்களுக்குஅறிவுறுத்தியுள்ளனர்.ஆனால் எமது நகரத்தைப் பொறுத்த வரையில் நெடியகாட்டுப்பகுதியிலிருந்து ஆதி கோவில் சந்தி வரையுள்ள பல வீடுகள் மற்றும் கட்டிடங்கள்பாதிக்கப்படலாம்.ஆனால் தற்போதைக்கு 7 மீற்றர் தூரத்திற்கே பாதை அமைக்கும் வேலைகள் நடைபெறவுள்ளதாகத் தெரிய வருகிறது.ஒருநகர அபிவிருத்தியில் வீதி அகலிப்பும்,மர நடுகையும் முக்கியமானவகிபாகத்தை வகிப்பதால் எமது மக்களும் இதற்கான ஒத்துழைப்பையும்,ஆதரவையும் வழங்க முன் வரவேண்டும்..வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டு மதில்களைஉள்நோக்கி நகர்த்துபவர்களுக்கு நட்டஈடாக மதில்களை அமைத்துக் கொடுக்கின்றனர்.ஆனால்பெரிய அளவில் நட்டஈட்டினை அவர்கள் வழங்க முன்வர மாட்டார்கள்.
சில ஊடகங்கள் சிறிய விடயத்தைக் கூடப்பூதாகரமாகக் காட்டித் தமது பிரச்சாரத்தை மேற்கொண்டு மக்களிடையே குழப்பத்தையும்,அமைதியின்மையையும்ஏற்படுத்தி வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளன.தாங்கள் குறிப்பிட்டது போன்று கடந்தஒன்பது வருடங்களாகக் குறித்த ஒரு நபரே மாட்டிறைச்சிக் கடையைக் குத்தகை மூலம்எடுத்து நடத்தி வருகிறார்.அவர் வழமையாகவே இந்தக் குத்தகையை எடுப்பதற்காக,முதலாவதாக எடுப்பவரையோ,அல்லது எடுக்க வருபவரையோபணத்தைக் கொடுத்து அவர்களை எடுக்க விடாது செய்து வருபவர்.அதே போன்று இந்த வருடமும்முதலாவது குத்தகைக்காரருக்கும் இரண்டாவதாக எடுத்தவருக்கும் இடையிலான கொடுக்கல்வாங்கல்களோடு சம்பந்தப்பட்ட உறுப்பினர் தொடர்பு கொண்டுள்ளதாக எமது கவனத்திற்குக்கொண்டு வரப்பட்டது.இது தொடர்பாக சபை அமர்வில் சரியான தீர்மானம் எடுக்கப்பட்டு இப்பிரச்சனைக்குமுற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. ஆனால் இதனைப் பெரிதுபடுத்தி ஒரு சிலர், குறிப்பாக மக்களால்நிராகரிக்கப்பட்டவர்கள் ,குறுக்கு வழி மூலம் சபை உறுப்பினராகஉள்நுழைவதற்கான வாய்ப்பாகப் பயன்படுத்திவல்வெட்டித்துறை நகர அபிவிருத்தியை,முடங்கச் செய்து,எதிரிகளின் பலத்தை ஓங்கச்செய்யும் முயற்சியிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.வல்வெட்டித்துறை நகரஅபிவிருத்தி,மற்றும் கல்வி,கலாச்சாரம்,விளையாட்டுத்துறைஆகியவற்றில் மேலோங்கி நிற்கும் வகையில் வல்வெட்டித்துறையைக் கட்டி வளர்க்கவேண்டும் என்ற இலட்சியத்துடன்,பல சவால்களைச் சந்தித்து,தர்மத்தின் வழி நின்றுஆட்சி செய்யும் எங்களால் அவர்களது தீய எண்ணங்களையும் வெற்றி கொள்ளமுடியும்.அவர்களது சதி வலையில் சிக்காது,எமது மக்கள் தம்மையும், எமது நகரையும் காத்துக்கொள்ள, மிகவும் நிதானமாகச் சிந்தித்துச் செயற்படுமாறு இந்தஇணையத்தினூடாகக் கேட்டுக் கொள்கிறேன்.
அரசியல் வாழ்க்கையிலும்,பொது வாழ்க்கையிலும் தன்னைஈடுபடுத்தி வரும் முதிர்ந்த அனுபவமுடைய திரு.க.சிவாஜிலிங்கம் அவர்கள்,எமது நகராட்சி மன்றத்தின்உப தலைவராக வரும் வாய்ப்பை இளையதலைமுறையைச் சேர்ந்த திரு க.சதீஸ் அவர்களுக்கு வழங்குவதற்காக மிகவும்பெருந்தன்மையுடன் தனது பதவியை விட்டுக் கொடுத்து இன்று ஒரு உறுப்பினராக இருந்துஎனக்குப் பல வகைகளிலும் உறுதுணையாக இருக்கிறார்.ஒரு சிலர் எதிர்பார்ப்பது போல்எமது சபை எந்தக் குழப்பமும் இன்றி மிகவும் சுமூகமான முறையில்இயங்குகின்றது.குறிப்பாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் இரு உறுப்பினர்களும் கூடமுழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருவதும் எமக்குப் பக்க பலமாக உள்ளது.
வல்வெட்டித்துறைக்கானமிகவும் சிறப்பு வாய்ந்த பொது நூலகம் எமது நகராட்சி மன்றத்தின் கட்டிடத்தில்இயங்கி வருகின்றது.அதில் சுமார் 10000 இற்கும் அதிகமான அரிய நூல்கள் உள்ளன.இதனைமிக அதிகளவிலான மாணவர்களும் பொதுமக்களும் பயன்படுத்தி வருகின்றனர்.இந்த ஆண்டுமாணவர்களினதும்,பொதுமக்களினதும் வாசிப்புத் திறனை மேம்படுத்தும் வகையில்நடமாடும் நூலக சேவை,மற்றும் வாசிப்பு முகாம் போன்றவற்றையும் நடத்தஉத்தேசித்திருக்கின்றோம்.அதே வேளை இவ்வளவு அரிய பெறுமதி வாய்ந்த நூல்கள் மற்றும்உசாத்துணைப்பிரிவு,இரவல் வழங்கும் பிரிவு,வாசகர் சேவை போன்ற பல்வேறுநூலகப் பிரிவுகள் இருந்த போதும் எமக்கென நவீன முறையில் வடிவமைக்கப்பட்ட பொதுநூலகக் கட்டிடம் இல்லாதது பெரிய குறையாக இருக்கின்றது.இதற்கென ஒரு காணி எமக்குக்கிடைக்குமாயின் பொது நூலகக் கட்டிடத்தை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கமுடியும்.எமது வரவு செலவுத் திட்டத்தினூடாகவும் உள்ளூராட்சி உதவி ஆணையாளர்அலுவலகம் ஊடாகவும் நூலக வளர்ச்சிக்கான நிதி ஒதுக்கீடுகள் செய்யப்படுகின்றன.
வல்வெட்டித்துறைநகராட்சி மன்றத்தின் அனைத்து அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கும் பெரும் சவாலாகவிளங்குவது திண்மக் கழிவகற்றலாகும்.அவற்றை அகற்றுவதிலும் நகரைச்சுத்திகரிப்பதிலும் எமது நகராட்சி மன்றத்தின் சுகாதாரத் தொழிலாளிகள்ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.எமது நகரத்திற்கான அனுமதிக்கப்பட்ட ஆளணியை விடசுமார் நான்கு பேருக்கான வெற்றிடமுள்ளது.அதனை நிரப்புவதற்கான அதிகாரம் தற்போதுபொது நிர்வாக அமைச்சிடமே உள்ளது.
திண்மக் கழிவகற்றலில் நகர சபைஊழியர்களின் எண்ணிக்கை என்பதை விடமக்களின் மனோபாவத்தில் மாற்றம் ஏற்படுவதே முக்கியமானது.இன்று குப்பைகளை எமதுமக்களின் வீடுகள்,மற்றும் பொது இடங்களிலிருந்து எடுத்துச் சென்றுஅவற்றைப் போடுவதற்கான இடம் தான் பிரச்சனையாக இருக்கிறது.நாங்கள் இவற்றைக் கொண்டுகூட்டுரம் தயாரிக்கும் முயற்சிகளில் இறங்குவதற்கும் கூட அவற்றைத் தரம் பிரிப்பதற்கும் போதிய இடவசதிவேண்டும்.இதற்கு சுமார் முப்பது பரப்பு நிலமாவது தேவைப்படுகிறது.
அதேவேளை பொது மக்கள் தங்கள் வீடுகளில் சேரும் திண்மக் கழிவுகளைத் தரம் பிரித்து வழங்கவேண்டும்.உக்கல் அடையக் கூடியவற்றை ஒரு பையிலும்,பிளாஸ்டிக்,பொலித்தீன் போன்றவற்றை வேறொரு பையிலும் போட்டு வைத்தால்குப்பைகளை எடுத்துச் சென்று புதைப்பதற்கும் வசதியாக இருக்கும்.அல்லது வீடுகளிலேயேஇடமுள்ளவர்கள் சிறிய குழிகளை வெட்டி அவற்றில் குப்பைகளைப் போட்டு வந்தால் ஆறுமாதங்களில் அவை கூட்டுரமாக மாறும்.அவற்றை வீட்டுத் தோட்டங்களுக்கோ,பூமரங்களுக்கோ பயன்படுத்தலாம்.அவை மிகச் சிறந்த பசளையாகஇருக்கும்.இந்த விடயத்தில் எல்லாவற்றிக்கும் நகரசபைத் தொழிலாளர்களை எதிர்பார்ப்பதைவிட,எமதுவீடுகளையும் எமது வீட்டின் முன்னால் உள்ள இடங்களையும் நாமே சுத்தம் செய்து வந்தால்வேறு எவரையும் நம்பியிருக்கத் தேவையில்லை.
நன்னீர்விநியோகத் திட்டம் ENREP செயற்திட்டத்தின் மூலம் தொண்டைமனாற்றில்ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இதற்கான கட்டுமானப் பணிகள் 2013 க்குள்பூர்த்தியாக்கப்பட்டதும்,குடிநீர் விநியோகம் இடம்பெறும்.நகர சபையுடன் இணைந்தேஇந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.இதற்கான நீரைத் தற்போதுமணற்காட்டிலிருந்து பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.நீண்ட நோக்கில்இரணைமடுவிலிருந்து நீர் பெறப்படும்.இவ்வாறு பெறப்படும் நீர் பொதுக் குழாய்கள்மூலமாகவும் வீட்டு உரிமையாளர்கள் விரும்பினால் தனித்தனியாக வீடுகளுக்கும்வழங்கப்படும்.2012 தை மாதத்தில் குழாய்களைப் பொருத்தும் வேலைகள்ஆரம்பிக்கப்படும்.2013 இலேயே நீர் விநியோகம் இடம்பெறும்.
ஒருநகரத்தின் ஒட்டுமொத்த அபிவிருத்தி என்பது அந்த நகரத்தின் கல்வி அபிவிருத்தியிலேயேதங்கியுள்ளது.ஏமது நகராட்சி மன்றத்திற்குள் உள்ள எட்டுப் பாடசாலைகளிலும் கல்விஅபிவிருத்தியை மேம்படுத்துவதற்கான திட்டங்களை வைத்திருக்கின்றோம்.2012 இலிருந்துஅவற்றைச் செயற்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம்.
நான் வடக்குக் கிழக்கு மாகாணத்தில் தமிழ்மொழிப் பிரிவுக்கும்,நூலக அபிவிருத்திப் பிரிவுக்கும் பொறுப்பான பிரதிக்கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றிய போது பல முன்னேற்றகரமான அபிவிருத்திகளைமேற்கொண்டிருக்கின்றேன்.வடக்குக் கிழக்கில் 286 புதிய நூலகங்களையும்,பல மில்லியன் ரூபாபெறுமதியான நூல்களையும் பெற்றுக் கொடுத்து மாணவர்களின் வாசிப்புத் திறனைமேம்படுத்தும் பல்வேறு செயற்திட்டங்களை முன்னெடுத்திருக்கின்றேன்.அதே வேளைவல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்திற்குள் இயங்கும் கம்பர்மலை வித்தியாலயம்,சிதம்பராக் கல்லூரி,வல்வை மகளிர் மகாவித்தியாலயம் ஆகிய பாடசாலைகளுக்கும் புதிய நூலகக் கட்டிடங்களையும் பல லட்சம் ரூபாபெறுமதியான வாசிப்பு நூல்களையும் வழங்கியிருக்கின்றேன்.அதை விட ஏனைய பாடசாலைகளுக்குப் பல பெறுமதி வாய்ந்தவாசிப்புத் துணை நூல்களையும் வழங்கியிருக்கின்றேன்.
இதுவரை என்னுடன் உணர்வுகளைப் பகிர்ந்து கொண்ட உங்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். வல்வெட்டித்துறை மண்ணிலும் புலம் பெயர்ந்தும் வாழும் எனது எனது உறவுகளுக்கும் எனது புத்தாண்டுவாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.2012 ஆம் ஆண்டு சுபீட்சமான வாழ்வை உங்கள்ஒவ்வொருத்தருக்கும் வழங்க வேண்டுமென்று ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்..