மரண அறிவித்தல் - திரு சிவப்பிரகாசம்  ஆறுமுகம்

sivapirakasam

அன்னைமடியில் 02/06/1937                முருகன்அடியில் 02/05/2013

வல்வை சிவப்பிரகாசம்  ஆறுமுகம் அவர்கள் முருகனடி சேர்ந்தார். வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் கொழும்பு, சாம்பியாவில் கணக்காளராகவும், இலங்கை வானொலியில் நாடகப்புகழ் நடிகராகவும் லண்டன், இங்கிலாந்தை வதிவிடம் ஆகவும் கொண்ட முருகன் அடியார் சிவ. ஆறுமுகம் அவர்கள் 2.5.2013 அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார் இறையடி சேர்ந்த சிவப்பிரகாசம் இராசரெத்தினம் அவர்களின் கனிஷ்ட புதல்வரும், இறையடி சேர்ந்த பொன்னுத்துரை  ஐயர்,  துரைரெத்தினம் அம்மாவினது அன்பு மருமகனும்  ஆவார். சறோஜினிதேவியின் அன்புக்கணவரும் கௌரி, காயத்ரியின் அன்புத்தந்தையும், ஸ்ரீராகவன், செல்வக்குமரனின் அன்பு மாமனாரும், குமரன், கார்த்திகா, முருகன் ஆகியோரின் அன்புப் பேரனுமாவார்.

அன்னார் இறையடி சேர்ந்த  சிவ. பசுபதி, நாகமுத்து மற்றும் குமாரசாமி, வேலுப்பிள்ளை, மகமாயிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரருமாவர். அத்துடன்  இறையடி சேர்ந்த  பாலேந்திரா  ஐயர், அன்னலெட்சுமி, செல்லப்பாக்கியம் மற்றும்  இராஜேந்திரா, வசந்தாதேவி, புவனேந்திரன்  ஐயர், புஷ்பராஜமணி, புஷ்பராணி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

உயர்திரு சிவ. ஆறுமுகம் தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி முருகன் மீது "வேலழகர் பாமலர்" போன்ற பல பாமலைகளையும்   வல்வை முத்துமாரி அம்மன் மீது "அன்னையர் பாமலர்" பாடல்களையும் பல பக்திப் பாடல்களையும் பல கூட்டுப்பிரார்த்தனைப் பாடல்களையும் இயற்றி பாடியவருமாவர். ஆற்றங்க்கரையானின் மீது அளப்பரிய அன்பும் பக்தியும் கொண்ட சிவ ஆறுமுகம் அவர்கள் தாம் செல்வச்சந்நிதி முருகன் மீது இயற்றிய பாடல்களை ஒலிப்பேழையில் வெளியிட்டு செல்வச்சந்நிதி முருகப்பெருமானின் புகழையும் அருளையும் அற்புதங்களையும் உலகறியச் செய்த செல்வச்சந்நிதியானின் அடியவரும் ஆவார்.

அன்னாரின் ஈமக்கிரியைகள் செவ்வாய்க்கிழமை மே 7 ஆம் திகதி காலை 9 மணியளவில் 25 Northwick Circle, Harrow HA3 0DYஇல் நடைபெற்று பின்னர் 12-1.30 Golders Green Crematorium West Chapel, Hoop Lane, London  NW11 7NLஇல் மயானத்தில் தகனகிரிகைகள் நடைபெற உள்ளது

தொடர்புகளுக்கு:
கௌரி ஸ்ரீராகவன் /காயத்ரி செல்வக்குமரன் 0044-(0)208-9077444 

sivapirakasam

 

Contact Admininistrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com