| வல்வெட்டித்துறையின் தங்கங்களாம் அங்கங்கள்!.... |
|
கந்தவன கடவையிலே
ஊறுகின்ற நீராலே
சந்திக்கு முன்னாலே
வெண்மணல் பரப்பினிலே
அரசமர நிழலிலே
அம்பாளின் அடிதனிலே
ஒற்றுமையின் உயர்வினையே
உற்சாகமாய் எமையழைக்கும்
மௌனமான மொழிகள்பேசி
பார்த்துநாம் வழிநடந்தால்
பெரியமலை என்றுரைக்க
கந்தோரடி கண்டுவிட்டால்
கற்பூர வாசனையில் |
தொண்டைமான் அகன்றெடுத்த வேறு:-
காட்டுவளவு இருக்கு
மீனாட்சி கோவிலுண்டு
துணிவுகள் பலபிறக்கும்
வித்தனை எனும்போது
தீருவில் திடலிருக்கும்
பூச்சிமுத்தான் என்றுரைத்தால்
மறவரின் உறைவிடமாய்
அமைதியின் உறைவிடமாய்
வல்வெட்டி எனுமொன்று
பொலிகண்டி கரையிருக்கு
கம்பர்மலை கொம்பன்தறை
கொண்டைக்கட்டை என்றும் |
| தமிழ்நீ.பொன்.சிவகுமாரன் |

Valvai Science & Technology Park (VSTP)
மனிதன் ஒரு சமூகப்பிராணி என அரசியல் விஞ்ஞானம் கூறுகின்றது. தனிமனிதன், குடும்பம், சமூகம், தேசியம் எனும் நான்கு நிலைகளில் மனிதவாழ்கையை சமூகவியலாளர்கள் ஆய்வு செய்கின்றனர். இந்நான்கு நிலைகளில் இருந்தும் ஒவ்வொருமனிதனும் தன்னையும் தனது செயல்களையும் மதிப்பீடு செய்துகொள்ளலாம். செயல்கள் சிந்தனையைத் தொடர்ந்து வரவேண்டும் அவைகளே ஆரோக்கியமான செயல்களாக பின்பு உருவகம் கொள்கின்றன. இவ்வகையில் மூன்றாம் நிலையில் காணப்படும் சமூகம் என்பதனை ஆரோக்கியமான செயல்களுடன் இணைக்கும் போது ஆரோக்கியமான சமுதாயம் மலர்கின்றது.
பொதுவாகவே ஒரு நெருக்கடி உருவாகும்போது அதனின்றும் தப்பித்துக்கொள்ள அதற்கு முந்தைய காலத்திற்கு திரும்பும் எண்ணமே எல்லோர்கும் வரும். ஆனால் நடைமுறையில் காலத்திற்கு ஏற்ப யாவையுமே மாறிவிட்டிருக்கும். இதனால் பழையவாழ்கைமுறை, பழையஇலட்சியங்கள், பழையநடைமுறைகள் திரும்பவும் நிலைபெறவேண்டும் என எண்ணுவதை விடுத்து காலத்திற்கு ஏற்ப எம்மை நாமே புதிதாய் நிர்மாணம் செய்து கொள்ளவேண்டும். இன்றையவாழ்வின் அன்றாடப் பிரச்சனைகளிற்கு அமைதியான தீர்வைப் பெற்றுக்கொண்டு வரும் எங்களுடைய புதியதலைமுறைக்கு ஒற்றுமை. அமைதி, சுதந்திரம் நிறைந்த சமுதாயத்தை விட்டுச்செல்வதே எமது கடமையாகின்றது.
வல்வெட்டித்துறை......சொல்லவே இனிக்கும்!.... இச்சொல்லின் பின்னே எத்தனையோ கதைகளும் கனவுகளும் எதிர்பார்புக்களும் ஏக்கங்களும் நிறைந்து காணப்படுகின்றன. இப்பெயரில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொருவரிடமும் ஏனைய மனிதர்களைப் போலவே வாழவேண்டுமென்ற ஆசையை நிறைவேற்றமுடியாமல் ஓர் இடைவிடாத போராட்டம் வெவ்வேறு வகையில் காணப்படுகின்றது. இது உலகில் எல்லா மனிதருக்கும் பொதுவானது. ஆனால் எமது நிலையோ வித்தியாசமானது. ஒரு குடும்பமாய் ஒன்றுபட்டிருந்த எமது சமூகம் தேசியம் என்னும் சூறாவளியால் சிதறுண்டு போனது. பல குடும்பங்களின் இணைவே சமூகம் எனப்படுவது. பல சமூகங்களின் இணைப்பினால் தேசியம் உருவாக்கப்படுகின்றது. ஆனால் வல்வெட்டித்துறையில் ஒரு குடும்பமே ஓரு சமூகமாக காணப்பட்டது. இங்குதான் நாம் மற்றவர்களிடம் இருந்து வேறுபடுகின்றோம். இதனாலேயே மற்றவர்களிற்கு வழிகாட்டவும் ஓரு தேசிய இனப்பிரச்சனைக்கு நம்பக்கையூட்டி அதனூடாக ஓருஇனத்திற்கு தலைமையேற்கவும் எம்மால் முடிந்தது. ஏனெனில் தேவை என வரும்பொழுது 'எங்களுடைய' என ஒன்றுபட்ட உணர்வில் நாம் உடனடியாகவே ஒன்று சேர்ந்தோம். இது மற்றைய சமூகங்களில் காணமுடியாத தனித்துவமானதும் இயற்கையிலே எமக்குக் கிடைத்த சிறப்பியல்புகளில் ஒன்றுமாகும்.
இன்று தலைமையேற்று வந்த நாம் சிதைந்த நிலையில் தனித்து விடப்பட்டிருக்கின்றோம். சொந்தமண்ணாம் வல்வெட்டித்துறையில் 'நான் வல்வெட்டித்துறை' யான் என வாழ்ந்து கொண்டிருப்பவர்களைவிட பிரித்து நோக்கினால் இலண்டனிலும் கனடாவிலும் தமிழ்நாட்டிலும் வாழும் வல்வையரின் தொகை மிக அதிகமாக காணப்படுகின்றது இதனைவிட நாம் புலம்பெயர்ந்து வாழும் எட்டு நாடுகளில் காணப்படும் வல்வையின் நலன்புரிச்சங்கங்களும் இவைகளை ஒன்றிணைக்கும் தாய்நில 'வல்வெட்டித்துறை ஒன்றியமும்' அவுஸ்ரேலியா, இலண்டன், டென்மார்க் ஆகிய நாடுகளில் இயங்கிவரும் ஊருக்கான இணையத்தளங்களும் உலகளாவிய வல்வையரை ஒன்றிணைக்கும் வல்வைக்கான valvai.com இணையத்தளமும் பொருளாதாரம் என்பதற்கு அப்பால் வல்வெட்டித்துறை என்ற எமது உயிரினும் மேலான ஊர் உணர்வைத் தொடாந்து தாங்கும் தூண்களாக கடமையாற்றுகின்றன.
இன்று பல மேற்போக்கான ஆய்வாளாகளும் போர்க்கால சூழ்நிலையை முப்பது வருடகாலமாகவே கணிப்பிடுகின்றனர். ஆனால் எமதுமண்ணில் சுதந்திர காலத்தில் இருந்தே மக்களின் மனநிலையும் சமூகப்பின்புலமும் பெரும் மோதல் உருவாகும் வாய்பினை எப்பொழுதும் தோற்றுவித்தவாறே நகர்ந்து வந்துள்ளது வெளிப்படையானது. நாற்பது வருடங்களிற்கு முன்பே அதற்கான தயார்ப்படுத்தலில் எமதுமண் ஈடுபட்டிருந்தது வரலாறு தரும் செய்தியாகும். சமூகத்தின் பொருளாதாரம் உயர்நிலையில் காணப்பட்ட அக்காலத்தில் 'ஆரேக்கியமான சமுதாயம்' என்ற கேள்விக்கே இடமிருக்கவில்லை. ஆனால் நாற்பது வருடங்களின் பின்னால் சிதைந்த நிலையில் இன்று காணப்படும் வல்வெட்டித்துறையை எதிர்காலத்தில் 'ஆரேக்கியமான சமுதாயம்' ஆக கட்டியெழுப்பவேண்டிய பெரும்பணி எம்முன்னால் காத்துக்கிடக்கின்றது.
பாரம்பரிய பெருமைமிக்க வல்வெட்டித்துறை ஆரேக்கியமான சமுதாயமாக மாற்றமடைய வேண்டுமெனில் கல்வி, மருத்துவம், பொதுசுகாதாரம், போக்குவரத்து, தொழில்வாய்ப்புகள் என்பன எமது மண்ணில் நிறைவான தாக்கப்படவேண்டும். அதேவேளை இத்துறைகள் யாவும் விரிபுபடுத்தப்படவும் நவீன மயப்படுத்தலுக்கும் உட்படவேண்டும். இவைகளை முழுமையாக நிறைவேற்றுவதற்கு உறுதியானபொருளாதார பின்புலமும் அது தளம்பாதிருக்க சரியான திட்டமிடலும் தேவைப்படும். இதற்கு சரியான அறிவூட்டல் அவசியமாகின்றது. அறிவு என்பது பெறப்படும் கல்வியிலும் கூடிய பயிற்சியினாலுமே கிடைக்கின்றது. இவ்வாறு ஒன்றுடன் ஒன்று இணைந்து காணப்படும் இவைகளினூடாகவே வளர்ச்சிபெற்ற சமுதாயம் ஒருபுறத்தில் உருவாகும். அதேவேளை மறுபுறத்தில் எமது கலை, கலாச்சாரம், பண்பாடு, சமயம் என்பன தொடர்ந்து பேணப்படவேண்டும். இவ்வாறே ஆரோக்கியமான சமுதாயம் உருவாகின்றது. 'அறிவும் ஆற்றலும் நற்குணமும் பண்பாடும் கொண்ட சமுதாயமே ஆரோக்கியமான சமுதாயம்'என சமூகவியலாளர்கள் வரையறை செய்துள்ளனர்.
இத்தகைய சமூகத்தின் அங்கமான தனிமனிதர்களிடம் அன்பு, நேர்மை, கூட்டுறவு, பொறுப்புணர்வு, மனிதநேயம், மரியாதை, அமைதி, ஒற்றுமை, எளிமை, சுதந்திரம், தனித்துவம். விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை. எதையும் உறுதியாக பிரதிபலிக்கும் தன்மை இவைகளுடன் நிறைந்தமனமும் காணப்படும். இத்தகைய நற்குணங்களுடனேயே வல்வெட்டித்துறை மக்கள் என்றும் காணப்படுகின்றனர். இத்தகைய சமுதாயத்திற்கு முன்கூறிய கல்வி, மருத்துவம், பொதுசுகாதாரம். போக்குவரத்து, தொழில்வாய்புகள் என்பவற்றை முழுமையாக ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம் எதிர்கால வல்வெட்டித்துறையை ஆரோக்கிய சமுதாயமாக மாற்றவேண்டும்.
தமிழ்நீ.பொன்.சிவகுமாரன்
வல்வை மக்கள் சார்பில் எமது நன்றிகள்
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் கொழும்பை வாழ்விடமாகவும் கொண்ட திருமதி. பர்வதாவர்த்தினி வேலுப்பிள்ளை அவர்கள் 11 -05 -2012 அன்று காலமானார். அன்னார் காலஞ்சென்ற காலஞ்சென்ற (தண்டையல்) பார்வதிப்பிள்ளை அவர்களின் மகளும், காலஞ்சென்ற திரு. சுங்கரநமச்சிவாயம் அவர்களின் மருமகளும், காலஞ்சென்ற திரு. சங்கரவேலுப்பிள்ளை சட்டத்தரணி அவர்களின் மனைவியும், மற்றும் பத்மலோஜனி, உருத்திரசிகாமணி, கமலலோஜனி, சங்கரசிகாமணி சுந்தரசிகாமணி புவனலோஜனி, பரமசிகாமணி PhD, பரிஸ்டர் இந்திரசிகாமணி, ராஜசிகாமணி ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார். மேலும் விபரங்களுக்கு

Valvai Science & Technology Park (VSTP)
வல்வையில் ஒரு விஞ்ஞான தொழில்நுட்பவியல் தொகுதி மையம் ஓன்று அமைப்பதற்கு கருத்துகளையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்.
உங்களின் கருத்துகளை பின்வரும் ஈமெயில் இற்கு அனுப்பிவைக்கவும்.
Capt. Vaithiyakumar அவர்கள், செயன்முறை மூலமும். Projector மூலமான காணொளியைப் பார்த்து விளக்கங்கள் தர முன்வந்துள்ளார். கப்பற் துறைசார் சகலருக்குமான அடிப்படை அலகுகள் இங்கு கற்பிக்கப்படும். எதிர்வரும் 28-04-2012 சனிக்கிழமையிலிருந்து கற்கைநெறி ஆரம்பமாகின்றது. எமது இளைஞர்களின் நன்மை கருதி இவையாவும் இலவசமே.!!!!
ஆதிகோவிலடி கல்விக்கூடம் அமைப்பதற்காக லண்டன் வாழ் ஆதிகோவிலடி மக்கள் ஓன்று கூடி நடாத்திய கலந்துரையாடலின் படத்தொகுப்புகள் இணைப்பு.
ரேவடி ஞானவைரவர் - படத்தொகுப்புகள் இணைப்பு.
வல்வை முத்துமாரியம்மன் அறநெறிப்பாடசாலை கட்டிடத்திறப்பு விழாவும் ஆரம்பநாள் அங்குரார்பணமும் 15/04/2012 படத்தொகுப
Valvai Seaman Welfare Association
Kalai Kalachchara Mantram Valvai
VSWA Valvai Seamen's Welfare Association Photo Gallery
VSWA Valvai Seamen's Welfare Association English Classes
Capt.S.பாஸ்கரனது குடும்பம் விடுமுறையில் இவ்விடம் வந்த போதும் ஓய்வின்றி எமது மாலுமிகளின் முன்னேற்றத்திற்காக பல கற்கை நெறிகளை கற்பித்தனர். விசேடமாக வல்வையில் உள்ள பல இல்லத்தரசிகள் உட்பட பல பெண் அரசாங்க ஊழியருக்கும் மொத்தமாக 62 பெண்களுக்கு ஆங்கிலம் பேச (Spoken English) கற்பித்தார். திருமதி.சியாமளா பாஸ்கரன், செல்வி.செவ்வந்தி பாஸ்கரன் இருவரும் அயராது உழைத்தனர். மேலும்.....

இதை பிரசுரிக்க அனுமதி தந்ததற்கு சிங்கப்பூரில் வெளியிடப்படும் தங்கமீன் மின் சஞ்சிகை நடத்துனர்களுக்கு மிகுந்த நன்றிகளை வல்வை.கொம் தெரிவித்துக்கொள்கிறது.

எம்மை அரவணைக்க காத்திருப்பது அன்னையும் அன்னைமண்ணாம் வல்வை மண்ணும்தான். PonSiva
புலம் பெயர் வாழ் வல்வை இளம் சமுதாயத்தினர் வல்வையிலுள்ள இளம் சமுதாயத்தினருடன் சேர்ந்து இயங்குவதற்கான வேலைத்திட்டங்களை உருவாக்குவதற்கும் ஒழுங்கமைப்பதற்கும் உரிய ஆயதங்களை செய்யும் முனைப்பாக புலம் பெயர் வாழ் வல்வை இளம் சமுதாயத்தினருக்கு விடுக்கும் வேண்டுகோள். ஒரு சமுதாயம் நிலைதளம்பாத, நிலைகுலையாத, பேணியலுகையான சமுதாயமாகவும் (Stable and Sustainale), பொருளாதார அபிவிருத்தியில் முழுமையுமடைய வேண்டுமானால் அதற்கு தகுந்த கல்வியறிவு இருக்க வேண்டும். மேலும்.......
விஞ்ஞான கணிப்பின்படி ஒருவர் பிற்காலத்தில்வெற்றியுடன் ஒரு முழுமையான மனிதனாக முதிர்ச்சியடைவார் என்பதற்குரிய அறிவு உள்வாங்குதல் அவர் பிறப்பிலிருந்து 5 ஆவது வயதிற்குள் 20% (வீதமும்), 5 இலிருந்து 12 வயதிற்குள் 20% (வீதமும்), மிகுதி 60% (வீதமும்) எஞ்சிய வாழ்கைக் காலத்திலும் நிர்ணயிக்கப்படுகிறது. மேலும்.......
வல்வையில் ஒரு ஆரோக்கியமான சமுதாயம் அமையவேண்டும் என்பது எமது நீண்டகால ஆசை, ஏன் என்று கேட்டால் அதற்கு நிறைய சொல்லவேண்டி இருக்கிறது. "வல்வை அல்லது வல்வெட்டித்துறை என்று சொல்லும் போது எமது உடல் முழுக்க மெய்சிலிர்கிறது, எவ்வளவு இனிமையான சொல்". இந்த கூற்றுக்கு பின்னால் 1980ஆம் ஆண்டு காலங்களுக்கு முன்னால் நாம் வாழ்ந்த வளமான, செழிப்பான, முழுநிறைவான, மனம்நிறைந்த வாழ்க்கை முறைதான் காரணம். மேலும்.......
நெடியகாடு பிள்ளையார் நிர்வாக கணக்கு அறிக்கை Aug 2011
நோர்வே - தமிழ்த் திரைப்பட விழாவில் கனடாவில் உருவான ஸ்டார் 67 திரைப்படம்AR67 Poster
வல்வை இளைஞர் ஒருவரினால் தயாரிக்கப்பட்ட முழுநீளத்திரைப்படம் STAR 67. தனது கலைத்திறமையை நன்றாக வெளிப்படுத்தியுள்ள கதி செல்வகுமார் அவர்கற்கு எமது பாராட்டுகள். STAR 67
காற்றின் உதவியுடன் கடல்நீரைக்கிழித்து அமெரிக்காவிற்குள் அன்று நுழைந்தது அன்னபூரணி. அன்று அன்னபூரணியுடன் இணைந்து வந்த தண்ணீர்ச்சத்தம் போல AnnaPuranas உடன் இணைந்து வருவதுதான் Water Sound Picture ஆகும். இதன் முதலாவதுவெளியீடே ஸ்ரார் 67.
தமிழ்நீ.பொன்.சிவகுமாரன் (26.11.2011)
பாய்மரக்கப்பல்கள் வகைகளும் பிரிவுகளும் / Types of Sailing Ships
Annapooraniammal from Valvai ( Florance C Robinson) is a Hermaphrodite Brig
உத்தேச மீன்பிடித்துறைமுகம் / அன்னையின் அரவணைப்பில் / அபிவிருத்திக்கட்டமைப்புகள் / Valvai Fishing Harbour Logo 01 / Valvai Fishing Harbour Logo 02 -------------------
சந்நிதி வேலும் வல்வையின் வரலாறும்-------------------
கி.மு. 483 - காலசேனன்
கி.மு. 177 - சேனன் / குத்திகன்
கி.மு. 145 - 101 எல்லாளன் / காலசேனன்
------------------------
எல்லாளன் காலத்தில்
வல்லியத்தேவனால்
வல்லிஆறு/நதி/ஓடை
(தொண்டைமானாறு)
வல்லிவெட்டியதுறை
வல்லிவெளி
வல்லிகாமம்
வல்லிவெட்டி
வல்லியந்தனை
வல்லிபுரம்
வல்லிமுனை
அமைக்கப்பட்டது
----------------------
கி.மு. 44 - 29 ஐந்து அரசர்கள்
கி.பி. 1620 - தொண்டைமானாறு